திங்கள், 13 ஏப்ரல், 2009

இல்லறத்தில் பேனக்கூடியவை

இஸ்லாம் கூறும் இந்த நடைமுறைகளை நம் வாழ்வில் அன்றாடம் நடைமுறை படுத்திக் கொள்ளவேண்டும். தொழுகை, இன்ன பிற வணக்கவழிபாடுகளை நாம் செய்து வந்தால் அதுவே ! போதும் எல்லாம் முடிந்துவிட்டது. என்று இருந்து விடக்கூடாது. அது மட்டும் அல்ல நம் வாழ்க்கை. இதில் நாம் தவறிழைத்தால் மிகப்பெரிய ஒரு இழப்பை நம் சந்ததிகள். பெற நேரிடும்.

இவன் நம் பிள்ளைதானே அவனுக்கு ஒன்றும் தெரியாது என்று நாமளாகவே ஒரு தப்பான என்னத்தை நம் மனதிற்குள் போட்டுக்கொண்டு அஜாக்கிரதையாக இருந்து வரும் மக்களும் நம்மில் உண்டு.

கணவன்,மனைவிக்குள் உண்டாகும் ஊடல் சரசங்கள் முதல் எல்லாவற்றிலும் மறைமுகம் இருந்தாகனும் பிள்ளைகள் முதற்க் கொண்டு தெரியவரக்கூடாது. என்று. ஓர் உன்னதப் பண்பாட்டை இந்த உலகிற்கு எடுத்து இயம்பும் அல்லாஹ்வின் திரு வசனம் நமக்கு நல்ல எடுத்துக் காட்டு.

நான்கு வயதாகும் சிறுவன் அவனுக்கு கீழே உள்ள தன் சகோதரியிடம் விளையாட்டு போக்கில் செய்யும் காரியம் அது. என்ன என்று தெரியாத வயதில் அப்படி அவனை செய்ய தூண்டிய செயல் எது ? என்று. கேட்டால்.

தன் பிள்ளைகள் முன் பெற்றோர்கள் மிருகங்களைப் போல் உடர்த் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் காரியம் தான். முக்கியக் காரணம். மனிதர்களாக வாழத் தூண்டும் மார்க்கம் இஸ்லாம் கூறும் கண்ணிய வாழ்க்கையை பேணி நல்ல சந்ததியை உருவாக்கி வைக்க கடமைப் பட்டுள்ளோம்.

24:58 ஈமான் கொண்டவர்களே! உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர் (அடிமை)களும், உங்களிலுள்ள பருவம் அடையாச் சிறுவர்களும் (உங்கள் முன் வர நினைத்தால்) மூன்று நேரங்களில் உங்களிடம் அனுமதி கோர வேண்டும்¢ ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னரும், நீங்கள் (மேல் மிச்சமான உங்கள் உடைகளைக் களைந்திருக்கும் 'ளுஹர்' நேரத்திலும், இஷாத் தொழுகைக்குப் பின்னரும்-ஆக இம்மூன்று நேரங்களும் உங்களுக்காக (அமையப் பெற்றுள்ள) மூன்று அந்தரங்க வேளைகளாகும் - இவற்றைத் தவிர (மற்ற நேரங்களில் மேல்கூறிய அடிமைகளும், குழந்தைகளும் அனுமதியின்றியே உங்கள் முன் வருவது) உங்கள் மீதும் அவர்கள் மீதும் குற்றமில்லை¢ இவர்கள் அடிக்கடி உங்களிடமும் உங்களில் ஒருவர் மற்றவரிடம் வரவேண்டியவர்கள் என்பதினால்¢ இவ்வாறு, அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு விவரிக்கின்றான்¢ மேலும் அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவன்¢ ஞானம் மிக்கவன்.

24:59 இன்னும் உங்களிலுள்ள குழந்தைகள் பிராயம் அடைந்துவிட்டால் அவர்களும், தங்களுக்கு (வயதில்) மூத்தவர்கள் அனுமதி கேட்பது போல் அனுமதி கேட்க வேண்டும்¢ இவ்வாறே அல்லாஹ் தன்னுடைய வசனங்களை உங்களுக்கு விவரிக்கின்றான்¢ அல்லாஹ் (யாவற்றையும்) அறிந்தவன்¢ ஞானம் மிக்கவன்.

வியாழன், 2 ஏப்ரல், 2009

காய்கறிகள் பழங்களில் கொடுத்துதவு

6:141 பந்தல்களில் படரவிடப்பட்ட கொடிகளும், படரவிடப்படாத செடிகளும், பேரீத்த மரங்களும் உள்ள சோலைகளையும், புசிக்கத்தக்க விதவிதமான காய், கறி, தானியங்களையும், ஒன்றுபோலும் வெவ்வேறாகவும் தோற்றமளிக்கும் ஜைத்தூன் (ஒலிவம்) மாதுளை ஆகியவற்றையும், அவனே படைத்தான். ஆகவே அவை பலனளித்தால் அவற்றின் பலனிலிருந்து புசியுங்கள். அவற்றை அறுவடை செய்யும் காலத்தில் அதற்குரிய (கடமையான) பாகத்தைக் கொடுத்து விடுங்கள். வீண் விரயம் செய்யாதீர்கள்- நிச்சயமாக அவன் (அல்லாஹ்) வீண் விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.

அறுவடைக் காலங்களில் நாம் என்ன செய்கிறோம். என்று கொஞ்சம் என்னிப்பார்கக் கடமைபட்டுளோம். இலாபம் வந்தால் ஒரே குஷி தான் போங்க அப்படியே நம் அண்டை வீட்டார்களுக்கும் நம் சந்தோஷத்தை பகிர்ந்துக் கொள்ளலாமே !

இறைவன் நமக்கு மேற்கண்ட வசனத்தின் படி வீண் விரயம் செய்யாமல் ஏழைகளை அரவணைத்து. அவர்களுக்கும் அன்டைவீட்டார்களுக்கும் உதவினால் பாகத்தை கொடுத்துவிடுங்கள் என்ற கட்டளையை செய்தோராகவும் அல்லாஹ்வின் திருப்தியை பெற்றோராகவும் ஆகிவிடுகிறோம்

இதை செய்த பிறகு அதில் உள்ள சந்தோஷத்தை பாருங்கள். அது போல் வேறு எங்கேயும் உங்களுக்கு திருப்தி இருக்காது.