திங்கள், 2 பிப்ரவரி, 2009

துன்பத்தில் பொறுமை மேற்கொள்வோம்

அஸ்ஸலாமு அலைக்கும். சகோதர சகோதரிகளே ! நாம் எதற்கெடுத்தாலும். சட்டென்று கோபம் கொள்கிறோம். அல்லது. அல்லாஹ் நமக்கு என்னத்தை செய்துவிட்டான். என்று அங்கலாய்த்து கொள்கிறோம். அல்லது இறைவன் முன்னோர்களுக்கு. மலக்குகளை அனுப்பி காப்பாற்றினான். அபாபீல் பறவை வழியாகவும் வெற்றியை நல்கினான் என்றெல்லாம். இறைவன் அளித்த சில உண்மை சம்பவங்களை எடுத்து சொல்லி அரற்றிக்கொண்டிருப்பதை. பலவாறும் பார்க்கிறோம். ஆனால் இறை வேதமான திருக் குர்ஆனை நாம் ஊன்றி படித்து பார்த்தால். அதில் நமக்கு பதில் கிடைத்தாகிவிடுகிறது. இதோ

இந்தப் பூமியிலோ உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது.(அல்குர்ஆன் 57:22)

எந்தத் துன்பம் ஏற்பட்டாலும் அல்லாஹ்வின் விருப்பத்தைக் கொண்டே தவிர இல்லை.(அல்குர்ஆன் 54:11)

ஆகையால் துன்பத்திலும் பொறுமை காத்து மேலும் அதை சகித்து. இறைவனின் திருப்தியை ஈருலகிலும் பெற்றுகொவோமாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக