செவ்வாய், 24 மார்ச், 2009

மறுமைக்காக பாடுபடு உலக இச்சைகளை விடு.

நாம் முஸ்லிம்கள் நமக்கு சொர்க்கம் நிச்சயம் என்று. கடமைக்கு தொழுதுக் கொண்டு பிற மத சகோதரர்கள் போலவே உலக வாழ்க்கையில் லயித்துக் கொண்டு. சின்னஞ்சிறு விஷயத்திர்க்கெல்லாம் சண்டைப் போட்டுக்கொண்டும் மரத்தின் சிறு கிளை தன் வீட்டின் முகப்பில் பட்டாலும். தன் அண்டை வீட்டாரிடம்

வம்புக்கு நின்றுக்கொண்டு. மல்லுக்கட்டும் முஸ்லீம் சகோதரர்களே ! நாம் என்றும் நிலைத்து வாழ்ந்திடுவோமா ? எதற்காக இந்த உலக வாழ்க்கையை மட்டும் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள். அதோடு முடிந்துவிட்டது என்று நினைத்துக் கொண்டீர்களா ? இல்லையே !

மறுமை இருக்கின்றதே. எதை நாம் செய்து வைத்திருக்கின்றோம். இந்த அண்டை வீட்டாரின் மரம் விஷயத்தையோ அல்லது ஒரு சாண் நிலத்தில் ஏற்படும் பிரச்சனையையோ நாம் விட்டுக் கொடுத்தாலும் அது தர்மமாகிவிடும். அல்லவா ?

இந்த தர்மத்தில் உழைப்போ, அல்லது மெனக்கீடோ எதுவும் கிடையாது.

79:37எனவே, எவன் வரம்பை மீறினானோ-

79:38இந்த உலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தானோ-

79:39அவனுக்கு, நிச்சயமாக நரகந்தான் தங்குமிடமாகும்.

ஆக விட்டுக் கொடுக்கும் தன்மை கூட இல்லாமல். நாம் மருமைக்காகப் பாடு பட்டவர்களா ? அல்லது மறுமையில் எமாற்றதிர்க்காக பாடு பட்டவர்களா ?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக