வியாழன், 2 ஏப்ரல், 2009

காய்கறிகள் பழங்களில் கொடுத்துதவு

6:141 பந்தல்களில் படரவிடப்பட்ட கொடிகளும், படரவிடப்படாத செடிகளும், பேரீத்த மரங்களும் உள்ள சோலைகளையும், புசிக்கத்தக்க விதவிதமான காய், கறி, தானியங்களையும், ஒன்றுபோலும் வெவ்வேறாகவும் தோற்றமளிக்கும் ஜைத்தூன் (ஒலிவம்) மாதுளை ஆகியவற்றையும், அவனே படைத்தான். ஆகவே அவை பலனளித்தால் அவற்றின் பலனிலிருந்து புசியுங்கள். அவற்றை அறுவடை செய்யும் காலத்தில் அதற்குரிய (கடமையான) பாகத்தைக் கொடுத்து விடுங்கள். வீண் விரயம் செய்யாதீர்கள்- நிச்சயமாக அவன் (அல்லாஹ்) வீண் விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.

அறுவடைக் காலங்களில் நாம் என்ன செய்கிறோம். என்று கொஞ்சம் என்னிப்பார்கக் கடமைபட்டுளோம். இலாபம் வந்தால் ஒரே குஷி தான் போங்க அப்படியே நம் அண்டை வீட்டார்களுக்கும் நம் சந்தோஷத்தை பகிர்ந்துக் கொள்ளலாமே !

இறைவன் நமக்கு மேற்கண்ட வசனத்தின் படி வீண் விரயம் செய்யாமல் ஏழைகளை அரவணைத்து. அவர்களுக்கும் அன்டைவீட்டார்களுக்கும் உதவினால் பாகத்தை கொடுத்துவிடுங்கள் என்ற கட்டளையை செய்தோராகவும் அல்லாஹ்வின் திருப்தியை பெற்றோராகவும் ஆகிவிடுகிறோம்

இதை செய்த பிறகு அதில் உள்ள சந்தோஷத்தை பாருங்கள். அது போல் வேறு எங்கேயும் உங்களுக்கு திருப்தி இருக்காது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக