புதன், 7 அக்டோபர், 2009

நரகத்தில் இறை மறுப்பாளர்களும், இணை வைப்பாளர்களும்.

இறை மறுப்பாளர்கள் மரணத்திற்கு பின் தண்டிக்கப் படுவார்கள். என்பது திண்ணம் அவர்கள் எந்த கோரிக்கை வைத்தாலும் நிராகரிக்கப் படும். எந்த நர்ச் செயல்கள் இவ்வுலகத்தில் செய்து வைத்திருந்தாலும். அது கண்டுக் கொள்ளப்படமாட்டாது. தானமாக இருக்கட்டும், உயிர்த் தியாகமாக இருக்கட்டும், எதுவும் பலனளிக்காது. ஏன் ? இறைவன் இப்படி ஒரு புறக்கணிப்பை கொடுக்கின்றான்.

”நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும், நீர் நஷ்டமடைந்தோராவீர். மேலும் அல்லாஹ்வை வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!” என்று (முஹம்மதே) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது. (திருக்குர்ஆன், 039:065,066)

இப்படி எச்சரித்ததோடு அல்லாமல் மனிதனுக்கு பகுத்தறிவையும் கொடுத்திருக்கின்றான். அந்த அறிவு விலங்கினத்திற்கு இருப்பது போல் அல்ல.

தனி விசேஷ தன்மைகள் கொண்டது. அழைக்காத விருந்துபசரிப்புக்கு போக மாட்டார். கவ்ரவமான வாழ்க்கை வாழ்வார். காரணம் பகுத்தறிவு ஆடு,மாடுகள் போல் கண்ட மேனிக்கு உலாவமாட்டார். வரைமுறைகள் நிர்ணயித்துக் கொள்வார்.

தன் மனைவியை தனக்கு வேண்டியே ! திருமணம் செய்திருப்பார். தன் மனைவி தன்னை மட்டும் கணவன் என்று சொல்லணும் என்று எதிர் பார்பார்.அன்றியும் தனக்கு மட்டுமே அவள் மனைவியாக இருக்கவேண்டும் என்பதும் ஒவ்வொருவரின் எதிர்ப்பார்ப்பு மாற்றமாக வேற யாரையாவது தன்னுடைய கணவன் என்று சொன்னால் ! எப்படி நமக்கு கோபம் வருமோ ! அந்த அளவுக்கு நம்மை கற்பிலிருந்து பரிபாலித்து வளர்த்து இன்றைக்கு வரை நம்மை பாது காத்து வைத்து இருக்கும் ஏக இறைவனுக்கு வேற ஒருவரை இணை கற்பிப்பது. கோபமூட்டக் கூடிய செயலாகும் அது மன்னிக்க முடியாத மா பாதக குற்றமாகும்.

இப்படி சிந்திக்கும் பகுத்தறிவை உலகத்தில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் கொடுத்த பின்பே ,நல்லது மற்றும் தீயதை இனங்காட்டி அறியக்கூடிய சக்தி அனைவருக்கும் இருப்பதாலேயே ! மனிதர்களுக்கு மட்டும் நரகம் என்றும் சுவனம் என்றும் அல்லாஹ் நிர்ணயித்துள்ளான்.

35:37 இன்னும் அ(ந்நரகத்)தில் அவர்கள்: 'எங்கள் இறைவா! நீ எங்களை (இதை விட்டு) வெளியேற்றுவாயாக! நாங்கள் வழக்கமாகச் செய்து கொண்டிருந்த (தீய)வற்றை விட்டும் ஸாலிஹான (நல்ல) அமல்களை செய்வோம்' என்று கூறிக் கதறுவார்கள். (அதற்கு அல்லாஹ்) 'சிந்தித்துப் பார்க்கக் கூடியவன் அதில் சிந்திக்கும் பொருட்டு, நாம் உங்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கவில்லையா? உங்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவரும் வந்திருந்தார் ஆகவே நீங்கள் (செய்த அநியாயத்தின் பயனைச்) சுவையுங்கள் ஏனென்றால் அநியாயக்காரர்களுக்கு உதவியாளர் எவருமில்லை' (என்று கூறுவான்).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக