புதன், 14 அக்டோபர், 2009

இரண்டு தடவை பூமியில் இருந்து வெளிப்படும் ஆதமின் சந்ததி

அல்லாஹுத் தஆலா முதல் மனிதர் ஆதாம் ( அலை ) அவர்களை களிமண்ணிலிருந்து படைத்ததை முன்னிறுத்தி. அந்தக் களிமன்னானது பூமியிலிருந்து எடுத்து படைக்கப் பட்டவர்தான் ஆதாம்.

அதனால் தான் பூமியில் விளையும் விளைச்சல்களையும், அதிலிருந்து பெறப் படும் நீரையும் நாம் உட்கொள்ளவேண்டியிருக்கின்றது.

பூமியில் கிடைக்கும் தாதுப் பொருட்கள் மனிதர்களின் உடலுக்கு இன்றியமையாதது.உதாரணத்திற்கு ஜின்க்- துத்தநாகம்,காப்பர்- தாமிரம், அயன்- இரும்பு, பைபெர்- இழை,நார் சத்து இன்னும் கால்சியம்- என்ற சுண்ணாம்பு சத்து இன்னும் அதிகதிமான மனிதர்களின் உடலுக்கு இவைகளின் அளவுகள் குறைவு ஏற்படும் போது மருத்துவர்கள் மூலம் எடுத்துக் கொள்ளும் மருந்து வகைகளில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள தாதுப் பொருட்கள் சிறுகச் சிறுக நம் உடலுக்கு மாத்திரைகளின் வழியாகவும் காப்சூல்களில் நிரப்பப் பட்டுள்ள சத்துகளின் உதவிக் கொண்டு நாம் அதைப் பெற்றுக்கொள்கிறோம்.

ஆகையால் மனிதர்களும் மற்றும் இதரப் படைப்புகளும் பூமியின் ஒரு பங்கு அல்லாமல் வேறில்லை.

20:55 இப் பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம் அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம் இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை இரண்டாம் முறையாகவும் வெளிப்படுத்துவோம்.

2 கருத்துகள்:

  1. அஸ்லாமு அலைக்கும்(வரஹ்)
    தங்களின் ஆக்கங்களை கண்டு வருகிறேன்.தங்களை மேலும் தொடர்புக்கொள்ள e-mail id தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு