திங்கள், 13 ஏப்ரல், 2009

இல்லறத்தில் பேனக்கூடியவை

இஸ்லாம் கூறும் இந்த நடைமுறைகளை நம் வாழ்வில் அன்றாடம் நடைமுறை படுத்திக் கொள்ளவேண்டும். தொழுகை, இன்ன பிற வணக்கவழிபாடுகளை நாம் செய்து வந்தால் அதுவே ! போதும் எல்லாம் முடிந்துவிட்டது. என்று இருந்து விடக்கூடாது. அது மட்டும் அல்ல நம் வாழ்க்கை. இதில் நாம் தவறிழைத்தால் மிகப்பெரிய ஒரு இழப்பை நம் சந்ததிகள். பெற நேரிடும்.

இவன் நம் பிள்ளைதானே அவனுக்கு ஒன்றும் தெரியாது என்று நாமளாகவே ஒரு தப்பான என்னத்தை நம் மனதிற்குள் போட்டுக்கொண்டு அஜாக்கிரதையாக இருந்து வரும் மக்களும் நம்மில் உண்டு.

கணவன்,மனைவிக்குள் உண்டாகும் ஊடல் சரசங்கள் முதல் எல்லாவற்றிலும் மறைமுகம் இருந்தாகனும் பிள்ளைகள் முதற்க் கொண்டு தெரியவரக்கூடாது. என்று. ஓர் உன்னதப் பண்பாட்டை இந்த உலகிற்கு எடுத்து இயம்பும் அல்லாஹ்வின் திரு வசனம் நமக்கு நல்ல எடுத்துக் காட்டு.

நான்கு வயதாகும் சிறுவன் அவனுக்கு கீழே உள்ள தன் சகோதரியிடம் விளையாட்டு போக்கில் செய்யும் காரியம் அது. என்ன என்று தெரியாத வயதில் அப்படி அவனை செய்ய தூண்டிய செயல் எது ? என்று. கேட்டால்.

தன் பிள்ளைகள் முன் பெற்றோர்கள் மிருகங்களைப் போல் உடர்த் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் காரியம் தான். முக்கியக் காரணம். மனிதர்களாக வாழத் தூண்டும் மார்க்கம் இஸ்லாம் கூறும் கண்ணிய வாழ்க்கையை பேணி நல்ல சந்ததியை உருவாக்கி வைக்க கடமைப் பட்டுள்ளோம்.

24:58 ஈமான் கொண்டவர்களே! உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர் (அடிமை)களும், உங்களிலுள்ள பருவம் அடையாச் சிறுவர்களும் (உங்கள் முன் வர நினைத்தால்) மூன்று நேரங்களில் உங்களிடம் அனுமதி கோர வேண்டும்¢ ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னரும், நீங்கள் (மேல் மிச்சமான உங்கள் உடைகளைக் களைந்திருக்கும் 'ளுஹர்' நேரத்திலும், இஷாத் தொழுகைக்குப் பின்னரும்-ஆக இம்மூன்று நேரங்களும் உங்களுக்காக (அமையப் பெற்றுள்ள) மூன்று அந்தரங்க வேளைகளாகும் - இவற்றைத் தவிர (மற்ற நேரங்களில் மேல்கூறிய அடிமைகளும், குழந்தைகளும் அனுமதியின்றியே உங்கள் முன் வருவது) உங்கள் மீதும் அவர்கள் மீதும் குற்றமில்லை¢ இவர்கள் அடிக்கடி உங்களிடமும் உங்களில் ஒருவர் மற்றவரிடம் வரவேண்டியவர்கள் என்பதினால்¢ இவ்வாறு, அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு விவரிக்கின்றான்¢ மேலும் அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவன்¢ ஞானம் மிக்கவன்.

24:59 இன்னும் உங்களிலுள்ள குழந்தைகள் பிராயம் அடைந்துவிட்டால் அவர்களும், தங்களுக்கு (வயதில்) மூத்தவர்கள் அனுமதி கேட்பது போல் அனுமதி கேட்க வேண்டும்¢ இவ்வாறே அல்லாஹ் தன்னுடைய வசனங்களை உங்களுக்கு விவரிக்கின்றான்¢ அல்லாஹ் (யாவற்றையும்) அறிந்தவன்¢ ஞானம் மிக்கவன்.

வியாழன், 2 ஏப்ரல், 2009

காய்கறிகள் பழங்களில் கொடுத்துதவு

6:141 பந்தல்களில் படரவிடப்பட்ட கொடிகளும், படரவிடப்படாத செடிகளும், பேரீத்த மரங்களும் உள்ள சோலைகளையும், புசிக்கத்தக்க விதவிதமான காய், கறி, தானியங்களையும், ஒன்றுபோலும் வெவ்வேறாகவும் தோற்றமளிக்கும் ஜைத்தூன் (ஒலிவம்) மாதுளை ஆகியவற்றையும், அவனே படைத்தான். ஆகவே அவை பலனளித்தால் அவற்றின் பலனிலிருந்து புசியுங்கள். அவற்றை அறுவடை செய்யும் காலத்தில் அதற்குரிய (கடமையான) பாகத்தைக் கொடுத்து விடுங்கள். வீண் விரயம் செய்யாதீர்கள்- நிச்சயமாக அவன் (அல்லாஹ்) வீண் விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.

அறுவடைக் காலங்களில் நாம் என்ன செய்கிறோம். என்று கொஞ்சம் என்னிப்பார்கக் கடமைபட்டுளோம். இலாபம் வந்தால் ஒரே குஷி தான் போங்க அப்படியே நம் அண்டை வீட்டார்களுக்கும் நம் சந்தோஷத்தை பகிர்ந்துக் கொள்ளலாமே !

இறைவன் நமக்கு மேற்கண்ட வசனத்தின் படி வீண் விரயம் செய்யாமல் ஏழைகளை அரவணைத்து. அவர்களுக்கும் அன்டைவீட்டார்களுக்கும் உதவினால் பாகத்தை கொடுத்துவிடுங்கள் என்ற கட்டளையை செய்தோராகவும் அல்லாஹ்வின் திருப்தியை பெற்றோராகவும் ஆகிவிடுகிறோம்

இதை செய்த பிறகு அதில் உள்ள சந்தோஷத்தை பாருங்கள். அது போல் வேறு எங்கேயும் உங்களுக்கு திருப்தி இருக்காது.

செவ்வாய், 24 மார்ச், 2009

மறுமைக்காக பாடுபடு உலக இச்சைகளை விடு.

நாம் முஸ்லிம்கள் நமக்கு சொர்க்கம் நிச்சயம் என்று. கடமைக்கு தொழுதுக் கொண்டு பிற மத சகோதரர்கள் போலவே உலக வாழ்க்கையில் லயித்துக் கொண்டு. சின்னஞ்சிறு விஷயத்திர்க்கெல்லாம் சண்டைப் போட்டுக்கொண்டும் மரத்தின் சிறு கிளை தன் வீட்டின் முகப்பில் பட்டாலும். தன் அண்டை வீட்டாரிடம்

வம்புக்கு நின்றுக்கொண்டு. மல்லுக்கட்டும் முஸ்லீம் சகோதரர்களே ! நாம் என்றும் நிலைத்து வாழ்ந்திடுவோமா ? எதற்காக இந்த உலக வாழ்க்கையை மட்டும் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள். அதோடு முடிந்துவிட்டது என்று நினைத்துக் கொண்டீர்களா ? இல்லையே !

மறுமை இருக்கின்றதே. எதை நாம் செய்து வைத்திருக்கின்றோம். இந்த அண்டை வீட்டாரின் மரம் விஷயத்தையோ அல்லது ஒரு சாண் நிலத்தில் ஏற்படும் பிரச்சனையையோ நாம் விட்டுக் கொடுத்தாலும் அது தர்மமாகிவிடும். அல்லவா ?

இந்த தர்மத்தில் உழைப்போ, அல்லது மெனக்கீடோ எதுவும் கிடையாது.

79:37எனவே, எவன் வரம்பை மீறினானோ-

79:38இந்த உலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தானோ-

79:39அவனுக்கு, நிச்சயமாக நரகந்தான் தங்குமிடமாகும்.

ஆக விட்டுக் கொடுக்கும் தன்மை கூட இல்லாமல். நாம் மருமைக்காகப் பாடு பட்டவர்களா ? அல்லது மறுமையில் எமாற்றதிர்க்காக பாடு பட்டவர்களா ?


வெள்ளி, 20 மார்ச், 2009

வாழ்விலும், இறப்பிலும், சோதனை நமக்கு

67:2 உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.

சகோதர சகோதரிகளே ! அல்லாஹ்வின் இந்த தூய வார்த்தையை கருத்தில் கொண்டு. நம்முடைய செயல்கள் தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ் போன்ற அடிப்படை கடமைகளிலிருந்து விலகிடாமல் இன்னும் ஏக இறைவனாம் அல்லாஹ் ( ஜல் ) தஆலாவுக்கு எந்த வகையிலும். இணை கர்ப்பிக்காமல்

நமக்கு வரும் சில துன்பங்களை சகித்தும், வீண் விரயம் செய்யாமல். நம் குழந்தைகளையும் தீன் அடிப்படையில் வளர்த்து வந்தால் நமக்கு வெற்றி நிச்சயம்.
அல்லாமல் எப்பொழுதும், சினிமா சீரியல் என்று நம் சிந்தனையை மழுங்கடித்து. எப்பொழுதும். கண்ணீர் சீரியல் பார்த்து நம் பொன்னான நேரங்களை வீணடித்தால். நிச்சயமாக இதற்க்கு இறைவனிடத்தில் பதில் சொல்லியாகவேண்டும். அதே கண்ணீரோடு.

சீரியலும் கண்ணீர் அதனை பார்ப்போரும் கண்ணீர் விடவேண்டியுள்ளது. பிறகு மறுமையிலும் தொடர்ந்து கண்ணீரா ?

என்ன ஒரு சூனியமான வாழ்க்கை வாழ்ந்துக்கொண்டிருக்கிறீர்கள்.

இப்படிப்பட்ட வாழ்வும் அதன் பிறகுள்ள இறப்பும் இறைவனிடத்தில் நாம் சோதனையாக சமர்பித்தால் மறுமையில் அழிவு நிச்சயம்.

மாறாக நல்ல விதமான செயல்பாடுகளை செய்து. இறைவனிடத்தில் வெற்றியை பெற்றுக் கொள்வோமாக.

புதன், 18 மார்ச், 2009

சுவர்க்கங்களில் கண்ணியப் படுத்தப்பட்டவர்களாக

சகோதரர்களே ! நம்மில் நயீம் என்ற சொர்க்கம் வேண்டும் என்றும். பிர்தவ்ஸ் என்ற சொர்க்கம் வேண்டும் என்றும் அல்லாஹ்விடம் வேண்டிக்கொள்வோம். ஆனால் இத்தகைய காரியங்களிலிருந்தும். விலகிக் கொண்டால் தான் அது நமக்கு நிச்சயம். அதோடு மட்டும் அல்லாமல் தொழுகையை கடைபிடித்துக்கொண்டும் இருக்கவேண்டும்.

அது எந்த ? வகையான காரியங்களிலிருந்து விலகிக் கொல்லனும்.

விபசாரம் செய்யக்கூடாது.

அமானிதப் பொருளிலும், மற்றும் வாக்குறுதியிலும் ஒழுங்காக இருக்கக் கற்றுக்கொல்லனும் .

ஆயிரம் ரூபாய் தருகிறேன் என்று சொல்லிவிட்டு. அவர் உங்களை நம்பி இருக்க கடைசியில் வந்து இல்ல இப்ப சிரமமாக உள்ளது. அதனால் வேற யாரிடமாவது பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்வது.வாக்கு மீறுதல்.

அடுத்து. சாட்சி சொல்வதில் ஏமாற்றுவது. அல்லது பின்வாங்குவது. அதில் நாம் உறுதியாக இருக்கணும்.

70:23 (அதாவது) தம் தொழுகையின் மீது நிலைத்திருக்கின்றார்களே அவர்கள்.


70:24 அவர்களது பொருள்களில் (பிறருக்கு) நிர்ணயிக்கப்பட்ட பங்கு உண்டு.


70:25 யாசிப்போருக்கும் வறியோருக்கும் (அவர்களின் பொருட்களில் பங்குண்டு).

70:26 அன்றியும் நியாயத் தீர்ப்பு நாள் உண்டென்பதை (மெய்ப்படுத்தி) உறுதிகொள்பவர்கள்.


70:27 இன்னும் தம்முடைய இறைவன் (வழங்கக் கூடிய) வேதனைக்கு அஞ்சியவாறு இருப்பார்களே அவர்கள்.


70:28 நிச்சயமாக அவர்களுடைய இறைவன் (வழங்கக்கூடிய) வேதனை அச்சப்படாது இருக்கக் கூடியதல்ல.


70:29 அன்றியும், தங்கள் மறைவிடங்களை (கற்பை) பேணிக் கொள்கிறார்களே அவர்கள்-


70:30 தம் மனைவியரிடத்திலும், தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடத்திலும் (உறவு கொள்வதைத்) தவிர, நிச்சயமாக அவர்கள் (இத்தகையோருடன் உறவு கொள்வது பற்றி) நிந்திக்கப்பட மாட்டார்கள்.


70:31 எனவே எவரேனும் இதற்கப்பால் (உறவு கொள்வதைத்) தேடினால் அவர்கள் (இறைவன் விதித்த) வரம்பை மீறியவர்கள்.


70:32 இன்னும் எவர்கள் தம் அமானிதங்களையும் தம் வாக்குறுதிகளையும் பேணிக் கொள்கின்றார்களோ அவர்கள்.


70:33 இன்னும், எவர்கள் தங்கள் சாட்சியங்களில் உறுதியுடன் இருக்கிறார்களோ அவர்கள்.


70:34 எவர்கள் தங்கள் தொழுகைகளைப் பேணிக் கொள்கின்றார்களோ அவர்கள்.


70:35 (ஆக) இத்தகையோர் தாம் சுவர்க்கங்களில் கண்ணியப் படுத்தப்பட்டவர்களாக இருப்பார்கள்.

செவ்வாய், 17 மார்ச், 2009

உன்னிப்பான சட்டங்கள்

இத்தாவை பொறுத்தவரை நான்கு மாதம் பத்து நாள் என்று வெளிப்படையாக நாம் தெரிந்து வைத்திருந்தாலும். திருமணம் ஆன பெண்ணாலானும் கணவன் தொடாத நிலையில் விவாகரத்து பெற்றுவிட்டால்; அந்தப் பெண் இத்தா இருக்கவேண்டிய அவசியமில்லை என்பதை இந்த குர்ஆன் வசனம் சுட்டிக் காட்டுகின்றது

33:49 ஈமான் கொண்டவர்களே! முஃமினான பெண்களை நீங்கள் மணந்து,
பிறகு நீங்கள் அவர்களை தொடுவதற்கு முன்னமேயே ``தலாக்" செய்து விட்டீர்களானால், அவர்கள் விஷயத்தில் நீங்கள் கணக்கிடக் கூடிய (இத்தத்)தவணை ஒன்றும் உங்களுக்கு இல்லை - ஆகவே அவர்களுக்குத் (தக்கதாக) ஏதேனும் கொடுத்து அழகான முறையில் அவர்களை விடுவித்து விடுங்கள்.