செவ்வாய், 24 மார்ச், 2009

மறுமைக்காக பாடுபடு உலக இச்சைகளை விடு.

நாம் முஸ்லிம்கள் நமக்கு சொர்க்கம் நிச்சயம் என்று. கடமைக்கு தொழுதுக் கொண்டு பிற மத சகோதரர்கள் போலவே உலக வாழ்க்கையில் லயித்துக் கொண்டு. சின்னஞ்சிறு விஷயத்திர்க்கெல்லாம் சண்டைப் போட்டுக்கொண்டும் மரத்தின் சிறு கிளை தன் வீட்டின் முகப்பில் பட்டாலும். தன் அண்டை வீட்டாரிடம்

வம்புக்கு நின்றுக்கொண்டு. மல்லுக்கட்டும் முஸ்லீம் சகோதரர்களே ! நாம் என்றும் நிலைத்து வாழ்ந்திடுவோமா ? எதற்காக இந்த உலக வாழ்க்கையை மட்டும் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள். அதோடு முடிந்துவிட்டது என்று நினைத்துக் கொண்டீர்களா ? இல்லையே !

மறுமை இருக்கின்றதே. எதை நாம் செய்து வைத்திருக்கின்றோம். இந்த அண்டை வீட்டாரின் மரம் விஷயத்தையோ அல்லது ஒரு சாண் நிலத்தில் ஏற்படும் பிரச்சனையையோ நாம் விட்டுக் கொடுத்தாலும் அது தர்மமாகிவிடும். அல்லவா ?

இந்த தர்மத்தில் உழைப்போ, அல்லது மெனக்கீடோ எதுவும் கிடையாது.

79:37எனவே, எவன் வரம்பை மீறினானோ-

79:38இந்த உலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தானோ-

79:39அவனுக்கு, நிச்சயமாக நரகந்தான் தங்குமிடமாகும்.

ஆக விட்டுக் கொடுக்கும் தன்மை கூட இல்லாமல். நாம் மருமைக்காகப் பாடு பட்டவர்களா ? அல்லது மறுமையில் எமாற்றதிர்க்காக பாடு பட்டவர்களா ?


வெள்ளி, 20 மார்ச், 2009

வாழ்விலும், இறப்பிலும், சோதனை நமக்கு

67:2 உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.

சகோதர சகோதரிகளே ! அல்லாஹ்வின் இந்த தூய வார்த்தையை கருத்தில் கொண்டு. நம்முடைய செயல்கள் தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ் போன்ற அடிப்படை கடமைகளிலிருந்து விலகிடாமல் இன்னும் ஏக இறைவனாம் அல்லாஹ் ( ஜல் ) தஆலாவுக்கு எந்த வகையிலும். இணை கர்ப்பிக்காமல்

நமக்கு வரும் சில துன்பங்களை சகித்தும், வீண் விரயம் செய்யாமல். நம் குழந்தைகளையும் தீன் அடிப்படையில் வளர்த்து வந்தால் நமக்கு வெற்றி நிச்சயம்.
அல்லாமல் எப்பொழுதும், சினிமா சீரியல் என்று நம் சிந்தனையை மழுங்கடித்து. எப்பொழுதும். கண்ணீர் சீரியல் பார்த்து நம் பொன்னான நேரங்களை வீணடித்தால். நிச்சயமாக இதற்க்கு இறைவனிடத்தில் பதில் சொல்லியாகவேண்டும். அதே கண்ணீரோடு.

சீரியலும் கண்ணீர் அதனை பார்ப்போரும் கண்ணீர் விடவேண்டியுள்ளது. பிறகு மறுமையிலும் தொடர்ந்து கண்ணீரா ?

என்ன ஒரு சூனியமான வாழ்க்கை வாழ்ந்துக்கொண்டிருக்கிறீர்கள்.

இப்படிப்பட்ட வாழ்வும் அதன் பிறகுள்ள இறப்பும் இறைவனிடத்தில் நாம் சோதனையாக சமர்பித்தால் மறுமையில் அழிவு நிச்சயம்.

மாறாக நல்ல விதமான செயல்பாடுகளை செய்து. இறைவனிடத்தில் வெற்றியை பெற்றுக் கொள்வோமாக.

புதன், 18 மார்ச், 2009

சுவர்க்கங்களில் கண்ணியப் படுத்தப்பட்டவர்களாக

சகோதரர்களே ! நம்மில் நயீம் என்ற சொர்க்கம் வேண்டும் என்றும். பிர்தவ்ஸ் என்ற சொர்க்கம் வேண்டும் என்றும் அல்லாஹ்விடம் வேண்டிக்கொள்வோம். ஆனால் இத்தகைய காரியங்களிலிருந்தும். விலகிக் கொண்டால் தான் அது நமக்கு நிச்சயம். அதோடு மட்டும் அல்லாமல் தொழுகையை கடைபிடித்துக்கொண்டும் இருக்கவேண்டும்.

அது எந்த ? வகையான காரியங்களிலிருந்து விலகிக் கொல்லனும்.

விபசாரம் செய்யக்கூடாது.

அமானிதப் பொருளிலும், மற்றும் வாக்குறுதியிலும் ஒழுங்காக இருக்கக் கற்றுக்கொல்லனும் .

ஆயிரம் ரூபாய் தருகிறேன் என்று சொல்லிவிட்டு. அவர் உங்களை நம்பி இருக்க கடைசியில் வந்து இல்ல இப்ப சிரமமாக உள்ளது. அதனால் வேற யாரிடமாவது பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்வது.வாக்கு மீறுதல்.

அடுத்து. சாட்சி சொல்வதில் ஏமாற்றுவது. அல்லது பின்வாங்குவது. அதில் நாம் உறுதியாக இருக்கணும்.

70:23 (அதாவது) தம் தொழுகையின் மீது நிலைத்திருக்கின்றார்களே அவர்கள்.


70:24 அவர்களது பொருள்களில் (பிறருக்கு) நிர்ணயிக்கப்பட்ட பங்கு உண்டு.


70:25 யாசிப்போருக்கும் வறியோருக்கும் (அவர்களின் பொருட்களில் பங்குண்டு).

70:26 அன்றியும் நியாயத் தீர்ப்பு நாள் உண்டென்பதை (மெய்ப்படுத்தி) உறுதிகொள்பவர்கள்.


70:27 இன்னும் தம்முடைய இறைவன் (வழங்கக் கூடிய) வேதனைக்கு அஞ்சியவாறு இருப்பார்களே அவர்கள்.


70:28 நிச்சயமாக அவர்களுடைய இறைவன் (வழங்கக்கூடிய) வேதனை அச்சப்படாது இருக்கக் கூடியதல்ல.


70:29 அன்றியும், தங்கள் மறைவிடங்களை (கற்பை) பேணிக் கொள்கிறார்களே அவர்கள்-


70:30 தம் மனைவியரிடத்திலும், தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடத்திலும் (உறவு கொள்வதைத்) தவிர, நிச்சயமாக அவர்கள் (இத்தகையோருடன் உறவு கொள்வது பற்றி) நிந்திக்கப்பட மாட்டார்கள்.


70:31 எனவே எவரேனும் இதற்கப்பால் (உறவு கொள்வதைத்) தேடினால் அவர்கள் (இறைவன் விதித்த) வரம்பை மீறியவர்கள்.


70:32 இன்னும் எவர்கள் தம் அமானிதங்களையும் தம் வாக்குறுதிகளையும் பேணிக் கொள்கின்றார்களோ அவர்கள்.


70:33 இன்னும், எவர்கள் தங்கள் சாட்சியங்களில் உறுதியுடன் இருக்கிறார்களோ அவர்கள்.


70:34 எவர்கள் தங்கள் தொழுகைகளைப் பேணிக் கொள்கின்றார்களோ அவர்கள்.


70:35 (ஆக) இத்தகையோர் தாம் சுவர்க்கங்களில் கண்ணியப் படுத்தப்பட்டவர்களாக இருப்பார்கள்.

செவ்வாய், 17 மார்ச், 2009

உன்னிப்பான சட்டங்கள்

இத்தாவை பொறுத்தவரை நான்கு மாதம் பத்து நாள் என்று வெளிப்படையாக நாம் தெரிந்து வைத்திருந்தாலும். திருமணம் ஆன பெண்ணாலானும் கணவன் தொடாத நிலையில் விவாகரத்து பெற்றுவிட்டால்; அந்தப் பெண் இத்தா இருக்கவேண்டிய அவசியமில்லை என்பதை இந்த குர்ஆன் வசனம் சுட்டிக் காட்டுகின்றது

33:49 ஈமான் கொண்டவர்களே! முஃமினான பெண்களை நீங்கள் மணந்து,
பிறகு நீங்கள் அவர்களை தொடுவதற்கு முன்னமேயே ``தலாக்" செய்து விட்டீர்களானால், அவர்கள் விஷயத்தில் நீங்கள் கணக்கிடக் கூடிய (இத்தத்)தவணை ஒன்றும் உங்களுக்கு இல்லை - ஆகவே அவர்களுக்குத் (தக்கதாக) ஏதேனும் கொடுத்து அழகான முறையில் அவர்களை விடுவித்து விடுங்கள்.

புதன், 4 மார்ச், 2009

நல்லவர்களுக்கும் தண்டனை வரும்.

அஸ்ஸலாமு அலைக்கும். சகோதர பெருமக்களே. இன்று நம்மில் பலர் தான் நல்ல காரியம் செய்தால் போதும் நாம் ஏன் ? பிறருக்கு அறிவுரை சொல்லனும். எதற்காக பதிலுக்கு வாங்கிக் கட்டிக்கனும் என்று பயந்து ஒதுங்கி போவதை பார்க்கின்றோம்.

சிலரோ அதிகமாக வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவார் நோன்பு நோர்ப்பார், ஹஜ் முதற்க் கொண்டு செய்திருப்பார். ஆனால் அவரிடமோ தொழில் வட்டி சம்பந்தப் பட்டதாக இருக்கும் இவர்கள் ஜக்காத் என்னும் கடமையை மறந்துவிடுவார்கள்.மற்றும் தர்மம் என்பது இவர்களின் அகராதியிலேயே இருக்காது.

இன்னும் சிலர் தாய் தந்தையர் வைத்த பெயரைமட்டும் தாங்கிக் கொண்டு. வெறும் கால்நடைகளைப் போல் உண்டுக் கொண்டும், உறங்கிக் கொண்டும், அலைந்துக் கொண்டிருப்பார்கள். இவர்களிடம் இஸ்லாத்தின் தாக்கம் எந்த சலனத்தையும் ஏற்படுத்தாது. இவர்களிடம் எந்த பலனையும் பிற மக்கள் அடைய முடியாது. இவர்களுக்கு நல்லது, தீயது எது ? என்று தெரியாது.

வெகு சிலரே ! தானும் வணக்க வழிப்பாடுகளில் ஈடுபடுத்திக் கொண்டு மற்றவர்களையும். ஈடுபட அறிவுறுத்துவார்கள். நல்லதை ஏவுவார்கள் மேலும் தீயதை தடுப்பார்கள். இவர்கள் போல் தான் அணைத்து முஸ்லிம்களும் தங்களை மாற்றிக் கொல்லனும்.

காரணம். வருடா வருடம் புயல் காற்று என்றும். நிலநடுக்கம் என்றும். பெரு வெள்ளம் என்றும் ஏராளமான உயிரிழப்புகளை நம்மில் பார்த்துகொண்டிருக்கிறோம்.இவைகள் எல்லாம் அல்லாஹ்விடத்திலிருந்து நமக்கு வரும் தண்டனையாகும்.

நாம் நினைப்போம் ஏன் ? நான் என்ன பாவம் செய்தேன். நல்லமுறையில் சம்பாரிக்கவில்லையா ? ஐந்து வேலை தொழவில்லையா ? நோன்பு நோர்க்கவில்லையா ? திக்ர் செய்தேனே. பின்ன எதற்காக அல்லாஹ் இப்படியொரு தண்டனை கொடுக்கவேண்டும் சடுதியில் வீடு வாசலை இழந்து நிராயுதபாணியாக ஆகிவிடுகிரோமே

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் எதற்காக இப்படியொரு தண்டனையை நமக்கு தரனும். என்று கேள்விகள் பலவை கேட்க்க தோன்றும். ஆனால் ஒரு சமுதாயத்தில் நல்லவர்கள் சரிபாதியாக இருந்து தீயவர்கள் பாதியாக இருந்தால் ஓரளவு தப்பித்துக் கொள்ளலாம்

ஆனால் நல்லவர்கள் சிறு தொகையாக இருந்து அக்கிரமக்காரர்கள் மிகுதியாக இருந்தால். அவர்களை தாக்கக்கூடிய வேதனை நம்மையும் தாக்கும் குடும்பத்தார்களை இழப்போம், விவசாயத்தில் நஷ்டத்தை பார்போம், ஒரு வினாடியில் நடு வீதிக்கு வந்துவிடுவோம். இது இறைவனின் குற்றம் ஆகாது.

ஏற்க்கனவே ! அல்லாஹ் நமக்கு கொடுத்த வாக்குறுதிப்படி நல்லதை ஏவ தவறிவிடுவதாலும். கெட்டதை பார்த்து கண்டும் காணாமலும் போனதால் தான் இந்த தண்டனை. ஏன் ? இப்படி செய்யக்கூடாது எங்களை மட்டும் தனியாக பொருக்கி எடுத்து அப்புறப்படுத்திய பிறகு அல்லாஹ் தீயவர்களுக்கு தண்டனை கொடுக்கலாமே !

ஆனால் இறைவன் இப்படி நல்லவர்களையும் சேர்த்து பழிவாங்குகிரானே ! இது அநீதி இல்லையா ? என்றும் யோசனை வரும். ஆனால் நமக்கு அல்லாஹ் இறக்கிய குர்ஆன் வசனத்தின் கருத்து மட்டும் யோசனை வராது. அதை அலட்சியமும் செய்துவிடுகிறோம். அந்த வசனம் என்ன என்பதை பாருங்கள்.

8:25 நீங்கள் வேதனைக்கு பயந்து கொள்ளுங்கள்; அது உங்களில் அநியாயம் செய்தவர்களை மட்டும்தான் குறிப்பாகப் பிடிக்கும் என்பதில்லை - நிச்சயமாக அல்லாஹ் தண்டனை அளிப்பதில் கடுமையானவன் என்பதையும் நன்கு அறிந்து கொள்ளுங்கள்.

அதனால் நல்லவர்களை அல்லாஹ் தனியாக செலக்ட் செய்து காப்பாற்றியாகவேண்டும். என்ற நிர்ப்பந்தம் அவனுக்கு இல்லை. ஆகையால் நாம் இந்த இறைவசனத்தை மனதில் வைத்துக்கொண்டு.நாம் மட்டும் நல்ல செயலை செய்துக்கொண்டு இருக்காமல் மற்றவர்களையும் அதை செய்யச் சொல்லி தூண்டி தீயவைகளை கடுமையாக எதிர்க்கவேண்டும். அவமானமோ, ரோஷமோ.இதற்க்கு தடைக் கல்லாக இருக்கக் கூடாது. மேலும் இதன் அடிப்படையில் நம்மை இறைவன் ஆக்கி அருள் புரிவானாக ஆமீன்.