ஞாயிறு, 24 மே, 2009

மரித்தோர் செவியேற்க மாட்டார்

இறந்து போனவர்களால் மற்றவர்களின் உரையாடலை கேட்க்க முடியுமா ? என்றால் அது முடியாது. உயிரோடு உள்ளவர்கள் பல கலந்துரையாடல்கள் மூலம் இன்னொருவரின் பேச்சுக்கு மருப்புரைப்பது. அல்லது ஆமோதிப்பது.

மற்றவை நண்பர்களுடன் நேரங்காலம் தெரியாமல் பல வகையான பேச்சுக்கள் பேசுவது. வினாக்கள் சார்ந்த வார்த்தைகள் வலம் விட்டு. பதில் பெற்றுக்கொவது. கிரிக்கெட் ஸ்கோர் என்ன ? என்றெல்லாம் கேட்டு அந்த கணமே நண்பர்களிடம் விடையையும் பெற்றுக்கொள்ளும் வார்த்தைகள் ஏராளம். கருத்துக்கள் பலவகைகள் பரிமாறிக்கொள்வது. ஏராளம். மனதில் ஆழமாக ஏற்றிக்கொள்ளும் புதிய சிந்ந்தனை கருத்துக்கள் ஏராளம். யாராவது. குற்றம் சுமத்தினால் அவதூறு சுமத்தினால் எதார்த்த நிலையிலிருந்து மாறி சினங்கொண்டு. ஆவேசப்பட்டு வாயில் வந்தவையெல்லாம் வீசியிடும். மறு வார்த்தைகள் ஏராளம்

அதற்க்கு அதாரத்தோடு மறுப்பு தெரிவிக்கும் தன்னை குற்றமற்றவர் என்று வாதாடும் வாசகங்கள் ஏராளம். தொலைபேசியில் மணிக்கணக்கில் பேசும் மனிதர்கள் ஏராளம் எங்கிருந்தோ பேசும் இன்னொருவரின் பேச்சுக்கு பதில் கொடுப்பது. புரியவில்ல மறுபடி சொல்லுங்கள் என்று வேண்டுகோள் விடுவது.

இவை எல்லாம் நாம் உயிரோடு இருப்பதால் இயல்பாக நடக்கும் சம்பவங்களுக்கு பதிலளிக்கிறோம்.
இது மாதிரி இறந்தவர்களால் செவிஏற்க முடியுமா ? உடனுக்குடன் மறுப்பு சொல்ல முடியுமா ? முடியாது. நாம் பகலில் உறங்கும் பொழுது யாராவது பேசினால் எப்படி அறையும் குறையுமாக விளங்குகிறது. அதே நேரத்தில் நமக்கு எதிராக யாராவது பேசினாலும் சட்டென்று பதிலளிக்க முடியாது.

இந்த நிலைப் பாட்டைவிட இன்னும் கீழானவைதான் இறப்பு. இன்னும் தூக்கமும் ஒரு இறப்பாக இறைவன் நமக்கு அறிவிக்கின்றான். தூக்க நிலைப்பாட்டில் உள்ள இறப்பை நாம் அளவுகோலாக எடுத்து. அந்த நேரத்தில் நடக்கும் பேச்சுக்களுக்கே பதில் கொடுக்க முடியாத நம்மை தெளிவாக கேட்க்க முடியாத மனிதர்கள்.

இறந்தவர்களாக மகான் என்ற பெயரிலும் சூபிய் என்ற பெயரிலும் கேட்க்க முடியும் என்பது. அறிவை வட்டிக் கடையில் அடகு வைத்து மீட்க்கமுடியாமல் மூழ்கவைப்பதற்கு சமமாகும். இறைவாக்கான குர்ஆனை பற்றிப் பிடிப்போமாக.

35:14 நீங்கள் அவர்களைப் பிரார்த்தி(த்து அழை)த்தாலும், அவர்கள் உங்கள் பிரார்த்தனையை (அழைப்பை)ச் செவியோற்கார் செவியேற்றாலும் கூட உங்களுக்கு பதில் அளிக்கமாட்டார்கள் கியாம நாளில் நீங்கள் இணைவைத்ததையும் அவர்கள் நிராகரித்து விடுவார்கள் யாவற்றையும் நன்கு அறிபவனைப் போன்று (அவர்கள்) எவருமே உங்களுக்கு அறிவிக்க மாட்டார்கள்.