மனிதர்களில் பலர் மனைவிகளைப் பார்த்து தாய்க்கு ஒப்பாக நினைத்து அழைப்பது. அல்லது தாயை போல் மனைவி இருக்கின்றார் என்று சொல்வது கூட இறைவனிடம் ஏற்றுக் கொள்ளமுடியாத பெரும் பாவம் ஆகும்.
அதே போல் வளர்ப்பு பிள்ளையையும் பெற்ற மகனுக்கு ஒப்பிட்டு மகனே ! என்று அழைப்பதும் தவறாகிவிடுகிறது. காரணம் எது எந்த அடிப்படையில் இருக்கின்றதோ ! அதை தழுவி தான் நாம் அழைத்துக் கொள்ளவேண்டும் அல்லாமல் நாமலாக உறவு முறைகளை உருவாக்கி கொள்ளக் கூடாது என்பது தான் இறைவனின் கட்டளை.
உதாரணத்திற்கு பெரியம்மா, பெரியப்பா, சின்னம்மா, சின்னப்பா, இப்படி இயற்கையாக உள்ள உறவு முறைகள் நாம் ஏற்படுத்திக் கொண்டது கிடையாது. நமக்கு இறைவனால் கிடைக்கப் பெற்றவை அது போலவே சகோதரி கணவன் மச்சான் என்பது நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உறவு. தம் சகோதரிக்கு கணவனை நாம் தேர்ந்தெடுக்கின்ற காரணத்தால் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உறவு என்கிறோம். இதில் மச்சான் உறவு முறை அற்றுப் போய்விடவும் சாத்தியக் கூறு உள்ளது. அல்லது வேறொரு மச்சான் உறவை கூட நாம் ஏற்படுத்திக் கொள்ளமுடியும்.
ஆனால் பெரியம்மா பெரியப்பா முறைகளை நாம் நிர்ணயிக்கமுடியாது. இதை போலவே மகன், அல்லது, மகள் உறவையும் நாம் தேர்ந்தெடுத்துக் கொண்டது இல்லை. இறைவனால் நமக்கு கிடைக்கப் பெற்றவை. இந்த இயற்க்கை முறையை தான் அல்லாஹ் நமக்கு கீழ் கானும் அழகான வசனத்தின் மூலம் தெரியப் படுத்தும் செய்தி
33:4 எந்த மனிதனுடைய அகத்திலும் அல்லாஹ் இரண்டு இருதயங்களை உண்டாக்கவில்லை - உங்கள் மனைவியரில் எவரையும் நீங்கள் லிஹார் (என் தாயின் முதுகைப் போன்று அதாவது தாய் போன்று இருக்கிறாள் என்று) கூறுவதனால் அவர்களை (அல்லாஹ் உண்மையான) உங்கள் தாயாக்கி விடமாட்டான், (அவ்வாறே) உங்களுடைய சுவீகாரப்பிள்ளைகளை உங்களுடைய புதல்வர்களாக ஆக்கிவிட மாட்டான். இவை யாவும் உங்களுடைய வாய்களால் சொல்லும் (வெறும்) வார்த்தைகளேயாகும், அல்லாஹ் உண்மையையே கூறுகிறான் இன்னும் அவன் நேர்வழியையே காட்டுகிறான்.
மற்றொன்று முக்கியமான விஷயமும் இதில் அடங்கியுள்ளது. யாரை தன் பிள்ளை என்கின்றோமோ ! அன்றிலிருந்தே அந்த வளர்ப்பு மகனின் உண்மையான தாயின் கற்புக்கு அவதூறாக அமைந்துவிடுகின்றது வளர்ப்பவரின் வார்த்தை. இன்னும் அவரே வளர்ப்பு மகனின் தாயிடம் உறவு கொண்டதாக அபாண்ட வார்த்தையை தனக்குள்ளேயே பழி போட்டுக் கொண்டுவிடுகிறார்.
அதனால் வளர்ப்பு மகனை தன் பிள்ளை என்று அழைக்காமல். நண்பர்களாக அல்லது சகோதரர்களாக அழைக்கலாம். அதுவே அழகானது.
33:5 (எனவே) நீங்கள் (எடுத்து வளர்த்த) அவர்களை அவர்களின் தந்தைய(ரின் பெய)ர் களைச் சொல்லி (இன்னாரின் பிள்ளையென) அழையுங்கள் - அதுவே அல்லாஹ்விடம் நீதமுள்ளதாகும் ஆனால் அவர்களுடைய தந்தைய(ரின் பெய)ர்களை நீங்கள் அறியவில்லையாயின், அவர்கள் உங்களுக்கு சன்மார்க்க சகோதரர்களாகவும், உங்களுடைய நண்பர்களாகவும் இருக்கின்றனர் (முன்னர்) இது பற்றி நீங்கள் தவறு செய்திருந்தால், உங்கள் மீது குற்றமில்லை ஆனால், உங்களுடைய இருதயங்கள் வேண்டுமென்றே கூறினால் (உங்கள் மீது குற்றமாகும்); அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
வெள்ளி, 30 அக்டோபர், 2009
புதன், 14 அக்டோபர், 2009
இரண்டு தடவை பூமியில் இருந்து வெளிப்படும் ஆதமின் சந்ததி
அல்லாஹுத் தஆலா முதல் மனிதர் ஆதாம் ( அலை ) அவர்களை களிமண்ணிலிருந்து படைத்ததை முன்னிறுத்தி. அந்தக் களிமன்னானது பூமியிலிருந்து எடுத்து படைக்கப் பட்டவர்தான் ஆதாம்.
அதனால் தான் பூமியில் விளையும் விளைச்சல்களையும், அதிலிருந்து பெறப் படும் நீரையும் நாம் உட்கொள்ளவேண்டியிருக்கின்றது.
பூமியில் கிடைக்கும் தாதுப் பொருட்கள் மனிதர்களின் உடலுக்கு இன்றியமையாதது.உதாரணத்திற்கு ஜின்க்- துத்தநாகம்,காப்பர்- தாமிரம், அயன்- இரும்பு, பைபெர்- இழை,நார் சத்து இன்னும் கால்சியம்- என்ற சுண்ணாம்பு சத்து இன்னும் அதிகதிமான மனிதர்களின் உடலுக்கு இவைகளின் அளவுகள் குறைவு ஏற்படும் போது மருத்துவர்கள் மூலம் எடுத்துக் கொள்ளும் மருந்து வகைகளில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள தாதுப் பொருட்கள் சிறுகச் சிறுக நம் உடலுக்கு மாத்திரைகளின் வழியாகவும் காப்சூல்களில் நிரப்பப் பட்டுள்ள சத்துகளின் உதவிக் கொண்டு நாம் அதைப் பெற்றுக்கொள்கிறோம்.
ஆகையால் மனிதர்களும் மற்றும் இதரப் படைப்புகளும் பூமியின் ஒரு பங்கு அல்லாமல் வேறில்லை.
20:55 இப் பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம் அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம் இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை இரண்டாம் முறையாகவும் வெளிப்படுத்துவோம்.
அதனால் தான் பூமியில் விளையும் விளைச்சல்களையும், அதிலிருந்து பெறப் படும் நீரையும் நாம் உட்கொள்ளவேண்டியிருக்கின்றது.
பூமியில் கிடைக்கும் தாதுப் பொருட்கள் மனிதர்களின் உடலுக்கு இன்றியமையாதது.உதாரணத்திற்கு ஜின்க்- துத்தநாகம்,காப்பர்- தாமிரம், அயன்- இரும்பு, பைபெர்- இழை,நார் சத்து இன்னும் கால்சியம்- என்ற சுண்ணாம்பு சத்து இன்னும் அதிகதிமான மனிதர்களின் உடலுக்கு இவைகளின் அளவுகள் குறைவு ஏற்படும் போது மருத்துவர்கள் மூலம் எடுத்துக் கொள்ளும் மருந்து வகைகளில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள தாதுப் பொருட்கள் சிறுகச் சிறுக நம் உடலுக்கு மாத்திரைகளின் வழியாகவும் காப்சூல்களில் நிரப்பப் பட்டுள்ள சத்துகளின் உதவிக் கொண்டு நாம் அதைப் பெற்றுக்கொள்கிறோம்.
ஆகையால் மனிதர்களும் மற்றும் இதரப் படைப்புகளும் பூமியின் ஒரு பங்கு அல்லாமல் வேறில்லை.
20:55 இப் பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம் அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம் இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை இரண்டாம் முறையாகவும் வெளிப்படுத்துவோம்.
புதன், 7 அக்டோபர், 2009
நரகத்தில் இறை மறுப்பாளர்களும், இணை வைப்பாளர்களும்.
இறை மறுப்பாளர்கள் மரணத்திற்கு பின் தண்டிக்கப் படுவார்கள். என்பது திண்ணம் அவர்கள் எந்த கோரிக்கை வைத்தாலும் நிராகரிக்கப் படும். எந்த நர்ச் செயல்கள் இவ்வுலகத்தில் செய்து வைத்திருந்தாலும். அது கண்டுக் கொள்ளப்படமாட்டாது. தானமாக இருக்கட்டும், உயிர்த் தியாகமாக இருக்கட்டும், எதுவும் பலனளிக்காது. ஏன் ? இறைவன் இப்படி ஒரு புறக்கணிப்பை கொடுக்கின்றான்.
”நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும், நீர் நஷ்டமடைந்தோராவீர். மேலும் அல்லாஹ்வை வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!” என்று (முஹம்மதே) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது. (திருக்குர்ஆன், 039:065,066)
இப்படி எச்சரித்ததோடு அல்லாமல் மனிதனுக்கு பகுத்தறிவையும் கொடுத்திருக்கின்றான். அந்த அறிவு விலங்கினத்திற்கு இருப்பது போல் அல்ல.
தனி விசேஷ தன்மைகள் கொண்டது. அழைக்காத விருந்துபசரிப்புக்கு போக மாட்டார். கவ்ரவமான வாழ்க்கை வாழ்வார். காரணம் பகுத்தறிவு ஆடு,மாடுகள் போல் கண்ட மேனிக்கு உலாவமாட்டார். வரைமுறைகள் நிர்ணயித்துக் கொள்வார்.
தன் மனைவியை தனக்கு வேண்டியே ! திருமணம் செய்திருப்பார். தன் மனைவி தன்னை மட்டும் கணவன் என்று சொல்லணும் என்று எதிர் பார்பார்.அன்றியும் தனக்கு மட்டுமே அவள் மனைவியாக இருக்கவேண்டும் என்பதும் ஒவ்வொருவரின் எதிர்ப்பார்ப்பு மாற்றமாக வேற யாரையாவது தன்னுடைய கணவன் என்று சொன்னால் ! எப்படி நமக்கு கோபம் வருமோ ! அந்த அளவுக்கு நம்மை கற்பிலிருந்து பரிபாலித்து வளர்த்து இன்றைக்கு வரை நம்மை பாது காத்து வைத்து இருக்கும் ஏக இறைவனுக்கு வேற ஒருவரை இணை கற்பிப்பது. கோபமூட்டக் கூடிய செயலாகும் அது மன்னிக்க முடியாத மா பாதக குற்றமாகும்.
இப்படி சிந்திக்கும் பகுத்தறிவை உலகத்தில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் கொடுத்த பின்பே ,நல்லது மற்றும் தீயதை இனங்காட்டி அறியக்கூடிய சக்தி அனைவருக்கும் இருப்பதாலேயே ! மனிதர்களுக்கு மட்டும் நரகம் என்றும் சுவனம் என்றும் அல்லாஹ் நிர்ணயித்துள்ளான்.
35:37 இன்னும் அ(ந்நரகத்)தில் அவர்கள்: 'எங்கள் இறைவா! நீ எங்களை (இதை விட்டு) வெளியேற்றுவாயாக! நாங்கள் வழக்கமாகச் செய்து கொண்டிருந்த (தீய)வற்றை விட்டும் ஸாலிஹான (நல்ல) அமல்களை செய்வோம்' என்று கூறிக் கதறுவார்கள். (அதற்கு அல்லாஹ்) 'சிந்தித்துப் பார்க்கக் கூடியவன் அதில் சிந்திக்கும் பொருட்டு, நாம் உங்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கவில்லையா? உங்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவரும் வந்திருந்தார் ஆகவே நீங்கள் (செய்த அநியாயத்தின் பயனைச்) சுவையுங்கள் ஏனென்றால் அநியாயக்காரர்களுக்கு உதவியாளர் எவருமில்லை' (என்று கூறுவான்).
”நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும், நீர் நஷ்டமடைந்தோராவீர். மேலும் அல்லாஹ்வை வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!” என்று (முஹம்மதே) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது. (திருக்குர்ஆன், 039:065,066)
இப்படி எச்சரித்ததோடு அல்லாமல் மனிதனுக்கு பகுத்தறிவையும் கொடுத்திருக்கின்றான். அந்த அறிவு விலங்கினத்திற்கு இருப்பது போல் அல்ல.
தனி விசேஷ தன்மைகள் கொண்டது. அழைக்காத விருந்துபசரிப்புக்கு போக மாட்டார். கவ்ரவமான வாழ்க்கை வாழ்வார். காரணம் பகுத்தறிவு ஆடு,மாடுகள் போல் கண்ட மேனிக்கு உலாவமாட்டார். வரைமுறைகள் நிர்ணயித்துக் கொள்வார்.
தன் மனைவியை தனக்கு வேண்டியே ! திருமணம் செய்திருப்பார். தன் மனைவி தன்னை மட்டும் கணவன் என்று சொல்லணும் என்று எதிர் பார்பார்.அன்றியும் தனக்கு மட்டுமே அவள் மனைவியாக இருக்கவேண்டும் என்பதும் ஒவ்வொருவரின் எதிர்ப்பார்ப்பு மாற்றமாக வேற யாரையாவது தன்னுடைய கணவன் என்று சொன்னால் ! எப்படி நமக்கு கோபம் வருமோ ! அந்த அளவுக்கு நம்மை கற்பிலிருந்து பரிபாலித்து வளர்த்து இன்றைக்கு வரை நம்மை பாது காத்து வைத்து இருக்கும் ஏக இறைவனுக்கு வேற ஒருவரை இணை கற்பிப்பது. கோபமூட்டக் கூடிய செயலாகும் அது மன்னிக்க முடியாத மா பாதக குற்றமாகும்.
இப்படி சிந்திக்கும் பகுத்தறிவை உலகத்தில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் கொடுத்த பின்பே ,நல்லது மற்றும் தீயதை இனங்காட்டி அறியக்கூடிய சக்தி அனைவருக்கும் இருப்பதாலேயே ! மனிதர்களுக்கு மட்டும் நரகம் என்றும் சுவனம் என்றும் அல்லாஹ் நிர்ணயித்துள்ளான்.
35:37 இன்னும் அ(ந்நரகத்)தில் அவர்கள்: 'எங்கள் இறைவா! நீ எங்களை (இதை விட்டு) வெளியேற்றுவாயாக! நாங்கள் வழக்கமாகச் செய்து கொண்டிருந்த (தீய)வற்றை விட்டும் ஸாலிஹான (நல்ல) அமல்களை செய்வோம்' என்று கூறிக் கதறுவார்கள். (அதற்கு அல்லாஹ்) 'சிந்தித்துப் பார்க்கக் கூடியவன் அதில் சிந்திக்கும் பொருட்டு, நாம் உங்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கவில்லையா? உங்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவரும் வந்திருந்தார் ஆகவே நீங்கள் (செய்த அநியாயத்தின் பயனைச்) சுவையுங்கள் ஏனென்றால் அநியாயக்காரர்களுக்கு உதவியாளர் எவருமில்லை' (என்று கூறுவான்).
சனி, 18 ஜூலை, 2009
வஹி அறிவிக்கப்பட்ட தாய் !
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) அன்பிர்க் குரிய சகோதரர்களே ! நாம் பலவாறாக இறைச் செய்தியை வல்ல ரஹ்மான் ஜிப்ரீல் ( அலை ) மூலம் மாந்தர்களுக்கு நேர்வழி காட்டும் முகமாக ஆதாம் நபி முதற்கொண்டு இறுதி நபியாகிய முஹம்மது ( ஸல் ) அவர்கள் வரை ஆண் பாலரிலிருந்தே நபியை அனுப்பியுள்ளான்.
திருக் குர்ஆனின் போதனையும் இந்த வரைமுறைக்கு உட்பட்டதே ! அதாவது நபியோ அல்லது. ரசூலோ அனைவரும் ஆண் இனமே அல்லாமல் பெண் இனத்தில் எந்த தூதரும் கிடையாது. அது. அல்லாஹ்வின் நியதி. அது மனிதர்களுக்குண்டான நியதி.
ஆனால் அல்லாஹ் ரப்புல் ஆலமீன். தனக்கென்று எந்த நியதியும் அமைத்துக் கொள்ளவில்லை என்பதை நாம் அறியக் கடமைப்பட்டுளோம். ( வஹி ) என்ற இறைச்செய்தியை ஜிப்ரீல் ( அலை ) மூலமும் நபி மூஸா ( அலை ) இடம் அருளியுள்ளான். வானவர் ஜிப்ரீல் அல்லாமலும் திரைக்கு அப்பாளிலிருந்தும் மூசாவிடம் பேசியுள்ளான் என்பதும் யாவரும் அறிந்ததே !
அந்த வஹி என்ற இறைச்செய்தியை தனிப்பட்ட முறையில் வேத வெளிப்பாடு அல்லாமல் நம்பிக்கையாளர் ஒழுக்கச் சீலர் என்ற முறைப்படி மற்ற பாலருடனும் அல்லாஹ் பேசியுள்ளான். என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
அது தான் உலகத்தின் உயர்ந்தப் பெண்மணி மரியம் ( அலை ) அவர்கள். அனைவரும் அறிந்ததே.
மற்றொரு தாய். அவர் தான் நபி மூஸா ( அலை ) அவர்களின் தாய் அவரிடமும் ஏக இறைவன் வஹி மூலம் பேசியுள்ளான். அதைப் பாருங்கள்
28:7 நாம் மூஸாவின் தாயாருக்கு: 'அவருக்கு (உன் குழந்தைக்குப்) பாலூட்டுவாயாக அவர் மீது (ஏதும் ஆபத்து வரும் என்று) நீ பயப்படுவாயானால், அவரை ஆற்றில் எறிந்து விடு - அப்பால் (அவருக்காக) நீ பயப்படவும் வேண்டாம், துக்கப்படவும் வேண்டாம் நிச்சயமாக நாம் அவரை உன்னிடம் மீள வைப்போம் இன்னும், அவரை (நம்) தூதர்களில் ஒருவராக்கி வைப்போம்' என்று வஹீ அறிவித்தோம்.
திருக் குர்ஆனின் போதனையும் இந்த வரைமுறைக்கு உட்பட்டதே ! அதாவது நபியோ அல்லது. ரசூலோ அனைவரும் ஆண் இனமே அல்லாமல் பெண் இனத்தில் எந்த தூதரும் கிடையாது. அது. அல்லாஹ்வின் நியதி. அது மனிதர்களுக்குண்டான நியதி.
ஆனால் அல்லாஹ் ரப்புல் ஆலமீன். தனக்கென்று எந்த நியதியும் அமைத்துக் கொள்ளவில்லை என்பதை நாம் அறியக் கடமைப்பட்டுளோம். ( வஹி ) என்ற இறைச்செய்தியை ஜிப்ரீல் ( அலை ) மூலமும் நபி மூஸா ( அலை ) இடம் அருளியுள்ளான். வானவர் ஜிப்ரீல் அல்லாமலும் திரைக்கு அப்பாளிலிருந்தும் மூசாவிடம் பேசியுள்ளான் என்பதும் யாவரும் அறிந்ததே !
அந்த வஹி என்ற இறைச்செய்தியை தனிப்பட்ட முறையில் வேத வெளிப்பாடு அல்லாமல் நம்பிக்கையாளர் ஒழுக்கச் சீலர் என்ற முறைப்படி மற்ற பாலருடனும் அல்லாஹ் பேசியுள்ளான். என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
அது தான் உலகத்தின் உயர்ந்தப் பெண்மணி மரியம் ( அலை ) அவர்கள். அனைவரும் அறிந்ததே.
மற்றொரு தாய். அவர் தான் நபி மூஸா ( அலை ) அவர்களின் தாய் அவரிடமும் ஏக இறைவன் வஹி மூலம் பேசியுள்ளான். அதைப் பாருங்கள்
28:7 நாம் மூஸாவின் தாயாருக்கு: 'அவருக்கு (உன் குழந்தைக்குப்) பாலூட்டுவாயாக அவர் மீது (ஏதும் ஆபத்து வரும் என்று) நீ பயப்படுவாயானால், அவரை ஆற்றில் எறிந்து விடு - அப்பால் (அவருக்காக) நீ பயப்படவும் வேண்டாம், துக்கப்படவும் வேண்டாம் நிச்சயமாக நாம் அவரை உன்னிடம் மீள வைப்போம் இன்னும், அவரை (நம்) தூதர்களில் ஒருவராக்கி வைப்போம்' என்று வஹீ அறிவித்தோம்.
ஞாயிறு, 24 மே, 2009
மரித்தோர் செவியேற்க மாட்டார்
இறந்து போனவர்களால் மற்றவர்களின் உரையாடலை கேட்க்க முடியுமா ? என்றால் அது முடியாது. உயிரோடு உள்ளவர்கள் பல கலந்துரையாடல்கள் மூலம் இன்னொருவரின் பேச்சுக்கு மருப்புரைப்பது. அல்லது ஆமோதிப்பது.
மற்றவை நண்பர்களுடன் நேரங்காலம் தெரியாமல் பல வகையான பேச்சுக்கள் பேசுவது. வினாக்கள் சார்ந்த வார்த்தைகள் வலம் விட்டு. பதில் பெற்றுக்கொவது. கிரிக்கெட் ஸ்கோர் என்ன ? என்றெல்லாம் கேட்டு அந்த கணமே நண்பர்களிடம் விடையையும் பெற்றுக்கொள்ளும் வார்த்தைகள் ஏராளம். கருத்துக்கள் பலவகைகள் பரிமாறிக்கொள்வது. ஏராளம். மனதில் ஆழமாக ஏற்றிக்கொள்ளும் புதிய சிந்ந்தனை கருத்துக்கள் ஏராளம். யாராவது. குற்றம் சுமத்தினால் அவதூறு சுமத்தினால் எதார்த்த நிலையிலிருந்து மாறி சினங்கொண்டு. ஆவேசப்பட்டு வாயில் வந்தவையெல்லாம் வீசியிடும். மறு வார்த்தைகள் ஏராளம்
அதற்க்கு அதாரத்தோடு மறுப்பு தெரிவிக்கும் தன்னை குற்றமற்றவர் என்று வாதாடும் வாசகங்கள் ஏராளம். தொலைபேசியில் மணிக்கணக்கில் பேசும் மனிதர்கள் ஏராளம் எங்கிருந்தோ பேசும் இன்னொருவரின் பேச்சுக்கு பதில் கொடுப்பது. புரியவில்ல மறுபடி சொல்லுங்கள் என்று வேண்டுகோள் விடுவது.
இவை எல்லாம் நாம் உயிரோடு இருப்பதால் இயல்பாக நடக்கும் சம்பவங்களுக்கு பதிலளிக்கிறோம்.
இது மாதிரி இறந்தவர்களால் செவிஏற்க முடியுமா ? உடனுக்குடன் மறுப்பு சொல்ல முடியுமா ? முடியாது. நாம் பகலில் உறங்கும் பொழுது யாராவது பேசினால் எப்படி அறையும் குறையுமாக விளங்குகிறது. அதே நேரத்தில் நமக்கு எதிராக யாராவது பேசினாலும் சட்டென்று பதிலளிக்க முடியாது.
இந்த நிலைப் பாட்டைவிட இன்னும் கீழானவைதான் இறப்பு. இன்னும் தூக்கமும் ஒரு இறப்பாக இறைவன் நமக்கு அறிவிக்கின்றான். தூக்க நிலைப்பாட்டில் உள்ள இறப்பை நாம் அளவுகோலாக எடுத்து. அந்த நேரத்தில் நடக்கும் பேச்சுக்களுக்கே பதில் கொடுக்க முடியாத நம்மை தெளிவாக கேட்க்க முடியாத மனிதர்கள்.
இறந்தவர்களாக மகான் என்ற பெயரிலும் சூபிய் என்ற பெயரிலும் கேட்க்க முடியும் என்பது. அறிவை வட்டிக் கடையில் அடகு வைத்து மீட்க்கமுடியாமல் மூழ்கவைப்பதற்கு சமமாகும். இறைவாக்கான குர்ஆனை பற்றிப் பிடிப்போமாக.
35:14 நீங்கள் அவர்களைப் பிரார்த்தி(த்து அழை)த்தாலும், அவர்கள் உங்கள் பிரார்த்தனையை (அழைப்பை)ச் செவியோற்கார் செவியேற்றாலும் கூட உங்களுக்கு பதில் அளிக்கமாட்டார்கள் கியாம நாளில் நீங்கள் இணைவைத்ததையும் அவர்கள் நிராகரித்து விடுவார்கள் யாவற்றையும் நன்கு அறிபவனைப் போன்று (அவர்கள்) எவருமே உங்களுக்கு அறிவிக்க மாட்டார்கள்.
மற்றவை நண்பர்களுடன் நேரங்காலம் தெரியாமல் பல வகையான பேச்சுக்கள் பேசுவது. வினாக்கள் சார்ந்த வார்த்தைகள் வலம் விட்டு. பதில் பெற்றுக்கொவது. கிரிக்கெட் ஸ்கோர் என்ன ? என்றெல்லாம் கேட்டு அந்த கணமே நண்பர்களிடம் விடையையும் பெற்றுக்கொள்ளும் வார்த்தைகள் ஏராளம். கருத்துக்கள் பலவகைகள் பரிமாறிக்கொள்வது. ஏராளம். மனதில் ஆழமாக ஏற்றிக்கொள்ளும் புதிய சிந்ந்தனை கருத்துக்கள் ஏராளம். யாராவது. குற்றம் சுமத்தினால் அவதூறு சுமத்தினால் எதார்த்த நிலையிலிருந்து மாறி சினங்கொண்டு. ஆவேசப்பட்டு வாயில் வந்தவையெல்லாம் வீசியிடும். மறு வார்த்தைகள் ஏராளம்
அதற்க்கு அதாரத்தோடு மறுப்பு தெரிவிக்கும் தன்னை குற்றமற்றவர் என்று வாதாடும் வாசகங்கள் ஏராளம். தொலைபேசியில் மணிக்கணக்கில் பேசும் மனிதர்கள் ஏராளம் எங்கிருந்தோ பேசும் இன்னொருவரின் பேச்சுக்கு பதில் கொடுப்பது. புரியவில்ல மறுபடி சொல்லுங்கள் என்று வேண்டுகோள் விடுவது.
இவை எல்லாம் நாம் உயிரோடு இருப்பதால் இயல்பாக நடக்கும் சம்பவங்களுக்கு பதிலளிக்கிறோம்.
இது மாதிரி இறந்தவர்களால் செவிஏற்க முடியுமா ? உடனுக்குடன் மறுப்பு சொல்ல முடியுமா ? முடியாது. நாம் பகலில் உறங்கும் பொழுது யாராவது பேசினால் எப்படி அறையும் குறையுமாக விளங்குகிறது. அதே நேரத்தில் நமக்கு எதிராக யாராவது பேசினாலும் சட்டென்று பதிலளிக்க முடியாது.
இந்த நிலைப் பாட்டைவிட இன்னும் கீழானவைதான் இறப்பு. இன்னும் தூக்கமும் ஒரு இறப்பாக இறைவன் நமக்கு அறிவிக்கின்றான். தூக்க நிலைப்பாட்டில் உள்ள இறப்பை நாம் அளவுகோலாக எடுத்து. அந்த நேரத்தில் நடக்கும் பேச்சுக்களுக்கே பதில் கொடுக்க முடியாத நம்மை தெளிவாக கேட்க்க முடியாத மனிதர்கள்.
இறந்தவர்களாக மகான் என்ற பெயரிலும் சூபிய் என்ற பெயரிலும் கேட்க்க முடியும் என்பது. அறிவை வட்டிக் கடையில் அடகு வைத்து மீட்க்கமுடியாமல் மூழ்கவைப்பதற்கு சமமாகும். இறைவாக்கான குர்ஆனை பற்றிப் பிடிப்போமாக.
35:14 நீங்கள் அவர்களைப் பிரார்த்தி(த்து அழை)த்தாலும், அவர்கள் உங்கள் பிரார்த்தனையை (அழைப்பை)ச் செவியோற்கார் செவியேற்றாலும் கூட உங்களுக்கு பதில் அளிக்கமாட்டார்கள் கியாம நாளில் நீங்கள் இணைவைத்ததையும் அவர்கள் நிராகரித்து விடுவார்கள் யாவற்றையும் நன்கு அறிபவனைப் போன்று (அவர்கள்) எவருமே உங்களுக்கு அறிவிக்க மாட்டார்கள்.
திங்கள், 13 ஏப்ரல், 2009
இல்லறத்தில் பேனக்கூடியவை
இஸ்லாம் கூறும் இந்த நடைமுறைகளை நம் வாழ்வில் அன்றாடம் நடைமுறை படுத்திக் கொள்ளவேண்டும். தொழுகை, இன்ன பிற வணக்கவழிபாடுகளை நாம் செய்து வந்தால் அதுவே ! போதும் எல்லாம் முடிந்துவிட்டது. என்று இருந்து விடக்கூடாது. அது மட்டும் அல்ல நம் வாழ்க்கை. இதில் நாம் தவறிழைத்தால் மிகப்பெரிய ஒரு இழப்பை நம் சந்ததிகள். பெற நேரிடும்.
இவன் நம் பிள்ளைதானே அவனுக்கு ஒன்றும் தெரியாது என்று நாமளாகவே ஒரு தப்பான என்னத்தை நம் மனதிற்குள் போட்டுக்கொண்டு அஜாக்கிரதையாக இருந்து வரும் மக்களும் நம்மில் உண்டு.
கணவன்,மனைவிக்குள் உண்டாகும் ஊடல் சரசங்கள் முதல் எல்லாவற்றிலும் மறைமுகம் இருந்தாகனும் பிள்ளைகள் முதற்க் கொண்டு தெரியவரக்கூடாது. என்று. ஓர் உன்னதப் பண்பாட்டை இந்த உலகிற்கு எடுத்து இயம்பும் அல்லாஹ்வின் திரு வசனம் நமக்கு நல்ல எடுத்துக் காட்டு.
நான்கு வயதாகும் சிறுவன் அவனுக்கு கீழே உள்ள தன் சகோதரியிடம் விளையாட்டு போக்கில் செய்யும் காரியம் அது. என்ன என்று தெரியாத வயதில் அப்படி அவனை செய்ய தூண்டிய செயல் எது ? என்று. கேட்டால்.
தன் பிள்ளைகள் முன் பெற்றோர்கள் மிருகங்களைப் போல் உடர்த் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் காரியம் தான். முக்கியக் காரணம். மனிதர்களாக வாழத் தூண்டும் மார்க்கம் இஸ்லாம் கூறும் கண்ணிய வாழ்க்கையை பேணி நல்ல சந்ததியை உருவாக்கி வைக்க கடமைப் பட்டுள்ளோம்.
24:58 ஈமான் கொண்டவர்களே! உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர் (அடிமை)களும், உங்களிலுள்ள பருவம் அடையாச் சிறுவர்களும் (உங்கள் முன் வர நினைத்தால்) மூன்று நேரங்களில் உங்களிடம் அனுமதி கோர வேண்டும்¢ ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னரும், நீங்கள் (மேல் மிச்சமான உங்கள் உடைகளைக் களைந்திருக்கும் 'ளுஹர்' நேரத்திலும், இஷாத் தொழுகைக்குப் பின்னரும்-ஆக இம்மூன்று நேரங்களும் உங்களுக்காக (அமையப் பெற்றுள்ள) மூன்று அந்தரங்க வேளைகளாகும் - இவற்றைத் தவிர (மற்ற நேரங்களில் மேல்கூறிய அடிமைகளும், குழந்தைகளும் அனுமதியின்றியே உங்கள் முன் வருவது) உங்கள் மீதும் அவர்கள் மீதும் குற்றமில்லை¢ இவர்கள் அடிக்கடி உங்களிடமும் உங்களில் ஒருவர் மற்றவரிடம் வரவேண்டியவர்கள் என்பதினால்¢ இவ்வாறு, அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு விவரிக்கின்றான்¢ மேலும் அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவன்¢ ஞானம் மிக்கவன்.
24:59 இன்னும் உங்களிலுள்ள குழந்தைகள் பிராயம் அடைந்துவிட்டால் அவர்களும், தங்களுக்கு (வயதில்) மூத்தவர்கள் அனுமதி கேட்பது போல் அனுமதி கேட்க வேண்டும்¢ இவ்வாறே அல்லாஹ் தன்னுடைய வசனங்களை உங்களுக்கு விவரிக்கின்றான்¢ அல்லாஹ் (யாவற்றையும்) அறிந்தவன்¢ ஞானம் மிக்கவன்.
இவன் நம் பிள்ளைதானே அவனுக்கு ஒன்றும் தெரியாது என்று நாமளாகவே ஒரு தப்பான என்னத்தை நம் மனதிற்குள் போட்டுக்கொண்டு அஜாக்கிரதையாக இருந்து வரும் மக்களும் நம்மில் உண்டு.
கணவன்,மனைவிக்குள் உண்டாகும் ஊடல் சரசங்கள் முதல் எல்லாவற்றிலும் மறைமுகம் இருந்தாகனும் பிள்ளைகள் முதற்க் கொண்டு தெரியவரக்கூடாது. என்று. ஓர் உன்னதப் பண்பாட்டை இந்த உலகிற்கு எடுத்து இயம்பும் அல்லாஹ்வின் திரு வசனம் நமக்கு நல்ல எடுத்துக் காட்டு.
நான்கு வயதாகும் சிறுவன் அவனுக்கு கீழே உள்ள தன் சகோதரியிடம் விளையாட்டு போக்கில் செய்யும் காரியம் அது. என்ன என்று தெரியாத வயதில் அப்படி அவனை செய்ய தூண்டிய செயல் எது ? என்று. கேட்டால்.
தன் பிள்ளைகள் முன் பெற்றோர்கள் மிருகங்களைப் போல் உடர்த் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் காரியம் தான். முக்கியக் காரணம். மனிதர்களாக வாழத் தூண்டும் மார்க்கம் இஸ்லாம் கூறும் கண்ணிய வாழ்க்கையை பேணி நல்ல சந்ததியை உருவாக்கி வைக்க கடமைப் பட்டுள்ளோம்.
24:58 ஈமான் கொண்டவர்களே! உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர் (அடிமை)களும், உங்களிலுள்ள பருவம் அடையாச் சிறுவர்களும் (உங்கள் முன் வர நினைத்தால்) மூன்று நேரங்களில் உங்களிடம் அனுமதி கோர வேண்டும்¢ ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னரும், நீங்கள் (மேல் மிச்சமான உங்கள் உடைகளைக் களைந்திருக்கும் 'ளுஹர்' நேரத்திலும், இஷாத் தொழுகைக்குப் பின்னரும்-ஆக இம்மூன்று நேரங்களும் உங்களுக்காக (அமையப் பெற்றுள்ள) மூன்று அந்தரங்க வேளைகளாகும் - இவற்றைத் தவிர (மற்ற நேரங்களில் மேல்கூறிய அடிமைகளும், குழந்தைகளும் அனுமதியின்றியே உங்கள் முன் வருவது) உங்கள் மீதும் அவர்கள் மீதும் குற்றமில்லை¢ இவர்கள் அடிக்கடி உங்களிடமும் உங்களில் ஒருவர் மற்றவரிடம் வரவேண்டியவர்கள் என்பதினால்¢ இவ்வாறு, அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு விவரிக்கின்றான்¢ மேலும் அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவன்¢ ஞானம் மிக்கவன்.
24:59 இன்னும் உங்களிலுள்ள குழந்தைகள் பிராயம் அடைந்துவிட்டால் அவர்களும், தங்களுக்கு (வயதில்) மூத்தவர்கள் அனுமதி கேட்பது போல் அனுமதி கேட்க வேண்டும்¢ இவ்வாறே அல்லாஹ் தன்னுடைய வசனங்களை உங்களுக்கு விவரிக்கின்றான்¢ அல்லாஹ் (யாவற்றையும்) அறிந்தவன்¢ ஞானம் மிக்கவன்.
வியாழன், 2 ஏப்ரல், 2009
காய்கறிகள் பழங்களில் கொடுத்துதவு
6:141 பந்தல்களில் படரவிடப்பட்ட கொடிகளும், படரவிடப்படாத செடிகளும், பேரீத்த மரங்களும் உள்ள சோலைகளையும், புசிக்கத்தக்க விதவிதமான காய், கறி, தானியங்களையும், ஒன்றுபோலும் வெவ்வேறாகவும் தோற்றமளிக்கும் ஜைத்தூன் (ஒலிவம்) மாதுளை ஆகியவற்றையும், அவனே படைத்தான். ஆகவே அவை பலனளித்தால் அவற்றின் பலனிலிருந்து புசியுங்கள். அவற்றை அறுவடை செய்யும் காலத்தில் அதற்குரிய (கடமையான) பாகத்தைக் கொடுத்து விடுங்கள். வீண் விரயம் செய்யாதீர்கள்- நிச்சயமாக அவன் (அல்லாஹ்) வீண் விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.
அறுவடைக் காலங்களில் நாம் என்ன செய்கிறோம். என்று கொஞ்சம் என்னிப்பார்கக் கடமைபட்டுளோம். இலாபம் வந்தால் ஒரே குஷி தான் போங்க அப்படியே நம் அண்டை வீட்டார்களுக்கும் நம் சந்தோஷத்தை பகிர்ந்துக் கொள்ளலாமே !
இறைவன் நமக்கு மேற்கண்ட வசனத்தின் படி வீண் விரயம் செய்யாமல் ஏழைகளை அரவணைத்து. அவர்களுக்கும் அன்டைவீட்டார்களுக்கும் உதவினால் பாகத்தை கொடுத்துவிடுங்கள் என்ற கட்டளையை செய்தோராகவும் அல்லாஹ்வின் திருப்தியை பெற்றோராகவும் ஆகிவிடுகிறோம்
இதை செய்த பிறகு அதில் உள்ள சந்தோஷத்தை பாருங்கள். அது போல் வேறு எங்கேயும் உங்களுக்கு திருப்தி இருக்காது.
அறுவடைக் காலங்களில் நாம் என்ன செய்கிறோம். என்று கொஞ்சம் என்னிப்பார்கக் கடமைபட்டுளோம். இலாபம் வந்தால் ஒரே குஷி தான் போங்க அப்படியே நம் அண்டை வீட்டார்களுக்கும் நம் சந்தோஷத்தை பகிர்ந்துக் கொள்ளலாமே !
இறைவன் நமக்கு மேற்கண்ட வசனத்தின் படி வீண் விரயம் செய்யாமல் ஏழைகளை அரவணைத்து. அவர்களுக்கும் அன்டைவீட்டார்களுக்கும் உதவினால் பாகத்தை கொடுத்துவிடுங்கள் என்ற கட்டளையை செய்தோராகவும் அல்லாஹ்வின் திருப்தியை பெற்றோராகவும் ஆகிவிடுகிறோம்
இதை செய்த பிறகு அதில் உள்ள சந்தோஷத்தை பாருங்கள். அது போல் வேறு எங்கேயும் உங்களுக்கு திருப்தி இருக்காது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)