வியாழன், 5 பிப்ரவரி, 2009

ஈடேற்றத்தின் பால் வாருங்கள்

அன்பார்ந்த கிறிஸ்தவ சகோதர சகோதரிகளே ! உண்மை மார்க்கமான இஸ்லாத்தின் பக்கம் தங்களை இணைத்துகொல்லும்படி வேண்டுகிறேன். இந்த மார்க்கத்தில். அல்லாஹ்வின் இருதிவேதத்தில் குறைபாடுகள் இல்லை. முரண்பாடுகள் இல்லை. வேண்டும் என்றே சில ஆசாமிகள் நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் மீது அவதூறையும். திரு குர்ஆன் மீதும் களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தோடு களம் இறங்கி ஆதாரமில்லாத குற்றச்சாட்டையும் அடுக்கிகொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த குர்ஆன் நீங்கள் வணங்கிகொண்டிருக்கும் இயேசுவை தூய்மையானவராகவும். பரிசுத்தவானாகவும் குறிப்பிடுகிறது. மேலும் அவருக்கு இறைவன் கொடுத்த சில அர்ப்புதங்களையும் குறிப்பிட்டு சொல்கிறது. அவருக்கு




முன்னாள் உள்ள (தவ்ராத்) என்கிற தோரா வேதமான மோசேவுக்கு கொடுத்ததையும் மெய்ப்பிக்கிறது.



அந்த தோரா மனித கரங்களால் இடைசொருகளுக்கும், திருத்தங்களுக்கும், மாற்றங்களுக்கும் இரையாக்கப்பட்டதையும். விவரித்துகூருகிறது. மேலும்( ஈசா ) என்கிற ஏசுவுக்கு இறைவன் அளித்ததும். குறுகிய காலகட்டத்திலேயே ! காணாமல் போய்விட்டதும் உண்மைதான்.அதற்க்கு உங்களுடைய புதிய ஏற்பாடான பைபிளே முக்கிய சான்று.



இயேசு செய்த வேறு அநேக காரியங்களுமுண்டு. அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாதென்று எண்ணுகிறேன். ஆமென். (யோவான் 21:25)




அப்படி இருக்கும் பொழுது இயேசு வேற என்னவெல்லாம் செய்தார். எதையெல்லாம் போதித்தார்.என்ற செய்தி மறைக்கப்பட்டதாலும்.நீக்கப்பட்டதாலும்.மனிதர்களுக்கு தேவையான முழு உபதேசம்.இல்லாமல் போன காரணத்தால் உலகம் வேற ஒரு தூதரை எதிர்பார்க்கும் கட்டாயத்திற்கு உள்ளானது.அது அவசியமும் கூட.


இன்னும் அந்த புதிய ஏற்பாட்டில் தேவனை தூக்கிப்பிடிப்பதர்க்காக.பொய்யும் பேசலாம். என்று இடைச்சொருகளிட்டு.தேவையான அளவு பொய்களையும், புரட்டுகளையும் சேர்திருப்பதையும் பார்க்கிறோம்.


என் பொய்யினாலே தேவனுடைய சத்தியம் அவருக்கு மகிமையுண்டாக விளங்கினதுண்டானால், இனி நான் பாவியென்று தீர்க்கப்படுவானேன்? - ரோமர் 3:4-7



மேலும் கர்த்தரிடம் இருந்து வரவில்லை நானே ! எழுதிக்கொண்டது. என்று தானாகவே வாக்குமூலம் கொடுத்திருக்கும். பவுலின் வார்த்தையில் வேத வாக்கல்ல மனிதக்கரங்கள் தான் என்று அவரே ! நிரூபித்துக்கொண்டார்.


மற்றவர்களைக்குறித்துக் கர்த்தர் அல்ல, நானே சொல்லுகிறதாவது - 1 கொரிந்தியர் 7:12

பவுலாகிய நான் இதை என் சொந்தக்கையாலே எழுதினேன், நான் அதைச் செலுத்தித் தீர்ப்பேன். - பிலமோன் - 1:19


அதனால் தூய குர்ஆன் வசனங்களை ஆராய்ந்து அதன் போதனைகளை ஏற்று இரண்டு உலகிலும் நன்மை பெறுவீர்களாக.


6:104 நிச்சயமாக உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஆதாரங்கள் வந்துள்ளன; எவர் அவற்றை ( கவனித்து ) பார்க்கிறாரோ அது அவருக்கே நன்மையாகும், எவர் (அவற்றை) பார்க்காது கண்ணை மூடிக்கொள்கிறாரோ அது அவருக்கே கேடாகும் ``நான் உங்களை காப்பவன் அல்ல'' (என்று நபியே கூறிவீராக)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக